20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்

 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும்



Video Link 1 :- Watch Video

Video Link 2 :- Watch Video

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. எனவே பல்வேறு சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பயணிகள் வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.



இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட 10 சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, ஆலப்புழா, மேட்டுப்பாளையம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி

Popular posts from this blog