Sunday, 30 May 2021

Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் கண்டு பிடிப்பது எப்படி

 Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் கண்டு பிடிப்பது எப்படி


Fake Indian Currency: ரூ. 500 நோட்டுகளில் போலியான நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட அறிக்கையின் படி, 2020-21 ஆம் ஆண்டில் ரூ .500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் (Fake Banknote) அதிக புழக்கத்தில் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கள்ள நோட்டு புழக்கத்தின் மொத்த மதிப்பில் 500 ரூபாய் கள்ள நோட்டு 31.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய 500 ரூபாய் மதிப்புள்ள 39,453 போலி ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1.11 லட்சம் மதிப்புள்ள போலி ரூ .100 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 2.09 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதால், ரூபாய் நோட்டுக்களை வாங்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை எப்படி கண்டிப்பிடிப்பது என சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் போலி ரூ .500 நோட்டுகள் 31% அதிகரித்துள்ளன: கவனமாக இருங்கள்!

புதிய 500 ரூபாய் நோட்டுகளின் அம்சங்கள் / போலி 500 ரூபாய் நோட்டை எவ்வாறு கண்டறிவது:
ரூபாய் நோட்டின் முன் பக்கம்:

1. ரூபாய் மதிப்பு எண்ணின் ஸீ-த்ரூ ரெஜிஸ்டர் (ஒளி புகும்போது காட்சி தெரியும்)

2. ரூபாய் மதிப்பு எண்ணின் மறைவிம்பம் (மறைமுகமாக காணப்படும்)

3. தேவநாகிரி எழுத்தில் ரூபாய் மதிப்பு எண்.

4. மகாத்மா காந்தி புகைப்படத்தின் நோக்குநிலை மற்றும் நிலையில் மாற்றம்.

5. ரூபாய் நோட்டை சாய்க்கும்போது, விண்டோட் செக்யூரிட்டி த்ரெட்டின் (பாதுகாப்பு தொடர் வரி) நிறம் பச்சையிலிருந்து நீலமாக மாறும்.

6. உத்தரவாத விதி, உறுதிப்பாட்டு விதியைக் கொண்டுள்ள ஆளுநரின் கையெழுத்து மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னம் ஆகியவை வலது பக்கம் நகர்த்தப்பட்டுள்ளன.

7. போர்ட்ரைட் மற்றும் எலக்ட்ரோடைப் (மின்தட்டச்சு) வாட்டர்மார்க்.

8. மேல்பக்க இடது புறத்திலும் கீழ்பக்க வலது புறத்திலும் சிறிய அளவிலிருந்து பெரிய அளவில் காணப்படும் எண் குழு

9. கீழ் பக்க வலதுபுறத்தில் ரூபாய்க்கான சின்னத்துடன் மாறும் வண்ணத்தில் (பச்சையிலிருந்து நீலம்) ரூபாய் மதிப்பு எண்.

10. வலதுபுறத்தில் அசோகர் சின்னம்.

கண்பார்வையற்றவர்களுக்கான அம்சங்கள்

மகாத்மா காந்தி புகைப்படம், அசோகர் சின்னம், தொடர் வரிகள் மற்றும் அடையாள குறியீடுகள் ஆகியவை அடையாளம் கண்டறியப்படும் வகையில் சற்றே உயர்ந்திருக்கும்.

11. வலதுபுறத்தில் 'ரூ.500' இருக்கும் வட்டம் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும்.

12. வலது மற்றும் இடது புறம் உள்ள 5 ப்ளீட் வரிகள் உயர்த்தப்பட்ட அச்சில் இருக்கும்.

ரூபாய் நோட்டின் பின் பக்கம்:

13. நோட்டின் இடதுபுறத்தில் நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு.

14. 'ஸ்வச்ச பாரத்' லோகோவும் (சின்னமும்) அதன் சொற்றொடரும் (ஸ்லோகன்).

15. மத்தியில் மொழிகளின் பேனல்.

16.செங்கோட்டை - இந்திய கொடியுடன் காணப்படும் இந்திய பாரம்பரிய தளம்.

17. வலதுபுறத்தில் தேவநாகிரியில் ரூபாய் மதிப்பு எண்.

நன்றி

Saturday, 29 May 2021

நீ என்ன பெரிய புலியா? மாஸ் கிளப்பிய யானை - வைரல் வீடியோ

 நீ என்ன பெரிய புலியா? மாஸ் கிளப்பிய யானை - வைரல் வீடியோ


யானைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. யானை என்றதும் எல்லாருக்கும் உடனே ஒரு சந்தோசம் தொற்றிக் கொள்ளும். 

Video Link :- Click This

இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை

 இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை


தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து இலவச மின்கட்டண அளவு 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோரே மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதியில் உள்ளனர்.

இதனால் தற்போது 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசமாக வழங்கப்படுவதை, 200 யூனிட்டாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே மின்கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி

Friday, 28 May 2021

ஜுன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு| Lock Down | Tamil Nadu | CM Stalin

ஜுன் 7ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு| Lock Down | Tamil Nadu | CM Stalin



Video Link 1 :- https://youtu.be/XSzPruH9a2Y

Video Link 2 :- https://youtu.be/_ki31RWrtGE

1 ST IMAGE LINK :- Click This

2ND IMAGE LINK :- Click This

தமிழகத்தில் ஜுன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்து ஊரடங்கு வரும் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு முடிய உள்ள நிலையில் கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் வரும் ஜூன் 7-ம் தேதி காலை 6 மணி வரை இதே கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும்

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது. இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

இ-பாஸ் பெறுவது எப்படி?

 இ-பாஸ் பெறுவது எப்படி?


எதற்கெல்லாம் இ-பதிவு தேவை?

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டங்களுக்குள்ளும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு அவசியம்.

திருமணம் மற்றும் முக்கிய உறவினர்களின் இறப்பு, மருத்துவச்சிகிச்சை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பதிவு அவசியம்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை அவசியம்.

இ-பதிவு விண்ணப்பிப்பது எப்படி?

Step : 1

முதலில் https://eregister.tnega.org/#/app/type என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

Step : 2

இணையதளத்தின் முகப்பு பகுதியில் தாங்கள் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் என்றால் அந்த அட்டவணையை தேர்வு செய்யுங்கள் அல்லது மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் அப்ளை செய்பவர்களாக இருந்தால் மற்றவர்கள் என்ற அட்டவணையை தேர்வு செய்யுங்கள்.

Step : 3

அதன்பிறகு வரும் பக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 Captcha code-ஐ உள்ளீடு செய்து Send OTP என்பதை கிளிக் செய்யுங்கள்.

Step : 4

இப்பொழுது நீங்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கு 6 இலக்க OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளிட்டு Login செய்யுங்கள்.

Step : 5

Login செய்து உள்நுழையும் பக்கத்தில்,

தனி நபர்/ குழு சாலை வழி பயணம் அல்லது தனி நபர் / குழு, ரயில் / விமானம் வழி தமிழ்நாட்டின் உள் நுழைதல் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று மூன்று வகையான ஆப்ஷன் கேட்கப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்கு எந்த வகை தேவையோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

Step : 6

அதன் பிறகு பக்கத்தில்

காரணம் என்பதில் : நீங்கள் எந்த காரணத்திற்காக இ-பாஸ் அப்ளை செய்கிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அதன்பின்

பயண தேதி

விண்ணப்பதாரர் பெயர்

விண்ணப்பதாரர் அடையாள சான்றிதழ் எண்

விண்ணப்பதாரர் சேர்த்து மொத்த பயணிகளின் எண்ணிக்கை

வாகன எண்

எங்கு வரை பயணம் செய்ய போகிறீர்கள்?

பயண காரணத்திற்கான ஆவணம்

விண்ணப்பதாரர்களின் அடையாள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று

வாகன வகை போன்ற விவரங்களை தெளிவாக உள்ளீடு செய்ய வேண்டும்.

Step : 7

பயணத்துக்கு குறிப்பிட்டுள்ள காரணங்கள் தொடர்பான ஆவணங்களை (மருத்துவரின் பரிந்துரை சான்றிதழ்) பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைனில் முறையாக சமர்ப்பித்த பின்னர், அவற்றை சரிபார்த்து விண்ணப்பதாரருக்கு இ-பாஸ் அளிக்கப்படும். அதன்பிறகு இ-பாஸ் சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றி

ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது


நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடை இல்லை.

மேலும் அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.

நன்றி

கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு

 கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு



கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவை ஏற்பாடு செய்து அதற்கான செலவை திமுக ஏற்கும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.ஏற்கனவே கோவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து,ஊரடங்கு காரணமாக வேலையின்றி வருமானம் இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஏழை மக்களின் பசியைப் போக்க அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில்,கோவையில் உள்ள அம்மா உணவகங்கள் முழுவதிலும் இலவச உணவுகள் வழங்கப்படும் என்றும் அதன் செலவுகளை திமுக ஏற்கும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பால்,கோவை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி

வரும் மே 30ஆம் தேதி மீண்டும் கோவை மாவட்டத்திற்குச் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

 வரும் மே 30ஆம் தேதி மீண்டும் கோவை மாவட்டத்திற்குச் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. எனினும், சென்னையில் கரோனா உயிரிழப்பு அதிகரித்துவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், சேலம், திருப்பூர், திருச்சி, கோவை உட்பட பல மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக, தொழில் நகரமான கோவையில் சென்னையைவிட கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த மாவட்டத்தில் நேற்று (27.05.2021) ஒரேநாளில் 4,734 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், வரும் மே 30ஆம் தேதி மீண்டும் கோவை மாவட்டத்திற்குச் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இதனிடையே, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் - மு.அ.சித்திக் இ.ஆ.ப., திருப்பூர் மாவட்டம் - சமயமூர்த்தி இ.ஆ.ப., ஈரோடு மாவட்டம் - டாக்டர் செல்வராஜ் இ.ஆ.ப. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

                                 நன்றி

இனி இவர்கள் தான் உங்கள் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரிகள்

இனி இவர்கள் தான் உங்கள் மாவட்டத்தின் சிறப்பு அதிகாரிகள் 




News Video Link :- Click This

தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனோ இரண்டாவது அலை தொற்று காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதித்துள்ளது. ஒருபுறம் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்து மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.


நேற்று தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தலைமைச்‌ செயலகத்தில்‌ கொரோனா நோய்த்‌ தொற்று தடுப்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ குறித்து கோயம்புத்தூர்‌, ஈரோடு, மதுரை, திருப்பூர்‌, சேலம்‌ மற்றும்‌ திருச்சிராப்ள்ளி ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


இக்கூட்டத்தில்‌ எடுக்கப்பட்ட முடிவின்படி கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மற்றும்‌ ஈரோடு ஆகிய மாவட்டங்களில்‌ சிறப்புக்‌ கவனம்‌ செலுத்திடவும்‌, மாவட்ட ஆட்சியர்களுடன்‌ ஒருங்கிணைந்து, கொரோனா நோய்த்‌ தடுப்பு மற்றும்‌ சிகிச்சைகள்‌ தொடர்பான ஒருங்கிணைப்புப்‌ பணிகளை கண்காணிக்கவும்‌, இம்மூன்று மாவட்டங்களுக்கும்‌ இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கு திரு.மு.அ.சித்திக்‌, இ.ஆ.ப., முதன்மைச்‌ செயலாளர்‌ /ஆணையர்‌, வணிகவரித்‌ துறை அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

திருப்பூர்‌ மாவட்டத்திற்கு திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப, வேளாண்மைத்‌ துறை செயலாளர்‌ அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர்‌ இரா.செல்வராஜ்‌, இ.ஆ.ப, நில அளவை மற்றும்‌ நிலவரித்‌ திட்டஇயக்குநர்‌ அவர்கள் நியமனம் செய்யபட்டுள்ளார்.

Thursday, 27 May 2021

No Fare Pink Buses for Women | தமிழகத்தில் பெண்களுக்கு புதிய பேருந்துகள் அறிமுகம்

No Fare Pink Buses for Women | தமிழகத்தில் பெண்களுக்கு புதிய பேருந்துகள் அறிமுகம்



தமிழகத்தில் மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 வாரங்களில் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிற நிலையில், கொரோனா நிவாரண நிதி,மாநகர பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள், ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



News Video Link 1 :- Click This

News Video Link 2 :- Click This

மாநகர பேருந்துகளை பொறுத்த வரை விரைவு பேருந்துகள் அல்லாத பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.



ஆனால் தமிழகத்தில் அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இயங்குவதால் இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் நடத்துனர் , பயணிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனை தவிர்க்கவும் மக்களின் குறைகளை களையவும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.




இந்தக் கூட்டத்தில் பெண்களுக்கு தனியாக பிங்க் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேருந்துகளின் நிறம் பிங்க் நிறமாக மாற்றப்படும் அல்லது பேருந்துகளில் பிங்க் நிற பட்டை பெயிண்ட்கள் மூலம் அடையாளப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இயக்கப்படும் 30 பேருந்துகள் பிங்க் நிறமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


நன்றி

Monday, 24 May 2021

Sunday, 23 May 2021

My New Trending Cartoon Photo

 My New Trending Cartoon Photo


How to create see this Video :- Click this





















Saturday, 22 May 2021

Trending Cartoon Photo Editing ⚡⚡without Picsart in TamiL TrickS Kannan TamiL TrickS Kannan ​

 Trending Cartoon Photo Editing ⚡⚡without Picsart in TamiL TrickS Kannan  @TamiL TrickS Kannan ​#Kannan #TamiLTrickSKannan

PicsArt app இல்லாமல் இந்த ஒரு App போதும் நீங்கள் Editing செய்ய


நீங்கள் எப்படி Editing செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த video Link ஐ Click செய்யவும்

Video Link 1 :- Click This

Video Link 2 :- Click This

App Link :- Click This

Green Screen Subscribe Button Copyright Free

 Green Screen Subscribe Button Copyright Free


Free Video Download Link ;- Click This


Video sample Link :- Click This

Friday, 21 May 2021

கரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளதா என நீங்களே அறிவது எப்படி

 கரோனா நோயாளி களுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளதா என நீங்களே அறிவது எப்படி



அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை, 

"தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற,



 படுக்கை வசதி உள்ளதா என்பதை அறிந்த பிறகே நோயாளிகளை அழைத்து வர வேண்டும். 



https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் கரோனா Click This படுக்கைகளின் இருப்பை சரி பார்க்கலாம்.

 படுக்கை வசதி நிலை அறிந்துவந்தால் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.



 கரோனா நோயாளிக்கு உதவ ஒருவர் மட்டுமே உடனிருக்க அனுமதிக்கப்படுவர். நோயாளியுடன் உடன் இருக்கும் நபர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.


Thursday, 20 May 2021

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

 கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்


Video Link :- Click This


இ-பதிவு குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், காலை 10 முதல் மாலை 6 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தடுக்க இ-பதிவு முறை கொண்டுவரப்பட்டது.

அவசியத் தேவைகளுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் நிலையில், அதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக மக்கள் தெரிவித்த நிலையில், அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்பட்டுள்ளது.

Sunday, 16 May 2021

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

New TN-E-Pass - How to Apply | இனி 2 நிமிடத்தில் கையில் E-Pass | எப்படி வாங்குவது?

இந்த video பாருங்க உங்களுக்கு புரியும் நண்பர்களே




Video Link 1 :- Click this

Video Link 2 :- Click This

Web site :- Click This

Saturday, 15 May 2021

How to Apply E-pass

How to Apply E-pass 

நான் இதில் (உதாரணம்) ஊட்டி என்று கூறி இருப்பேன் நீங்கள் உங்களுக்கு தேவை யான ஊரினை பதிவு செய்யவும்



Video link :- Click This


                           நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...