Wednesday, 6 April 2022

பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறது தமிழகத்தில்

 பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறதா கோட்டைக்கு பறக்கும் கோரிக்கை


சென்னை: பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு வெளிவருமா? தமிழக மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வரக்கூடுமா?

என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..

இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.

கோடை வெயில்

இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இளமாறன்

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

கோட்டை
 

முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது.

சகஜத்தன்மை

எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.

கோரத்தாண்டவம்

வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


நன்றி

Sunday, 3 April 2022

சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது

 சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது




சேலம்: உலகளவில் மலேசியாவில் பாமாயிலும், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும், ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது.


சமையல் எண்ணெயை பொறுத்தமட்டில் இந்தியாவின் தேவைக்கு வெளிநாடுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறோம். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 30முதல் 40சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் செலவு ஏற்படுவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் சமையல் எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ''ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், அங்கிருந்து கக்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு லிட்டர் ஆயில் ₹130 லிட்டருக்கு விற்றது. போர் தொடங்கிய நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் லிட்டர் விலை ₹190 வரை உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதியை அதிகரிக்க வேண்டும். மேலும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உற்பத்தியையும் அதிகரிக்க ேவண்டும்,'' என்றனர்.


நன்றி

Saturday, 2 April 2022

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

 விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது




எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது.

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூடியூபில் ரிக்கார்டுகளை உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் புதிய ரிக்கார்டுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

6 மணிக்கு வெளியானதை தொடர்ந்து பெரும்பாலான திரையரங்குகளில் உடனுக்குடன் ட்ரெய்லர் திரையிடப்பட்டதால், சினிமா ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

நன்றி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்ல ை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம்...