தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள் இவற்றுக் கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு புதிய தளர்வுகள்  இவற்றுக் கெல்லாம் அனுமதி


Video link 1 :- Click This

Video link 2 :- Click This

வேலைக்கு செல்ல ePass இ-பதிவு  செய்வது எப்படி? Video Link :- Click This

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு முதலமைச்சர் அறிவிப்பு

ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து உத்தரவு. இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌ தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, அதே சமயம்‌ பொதுமக்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடனும்‌ தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, மேற்காணும்‌ 11 மாவட்டங்களில்‌ கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 14-6-2021 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

  • தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌ இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌
  • உமின்‌ பணியாளர்‌ ,பிளம்பர்கள்‌, கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌, எனினும்‌
  • மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌
  • வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌
  • வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌ கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 25 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத்‌ தவிர, இதர 27 மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன்‌ கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படும்‌.

  • அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌
  • அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.
  • வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ (பாற 58 பழுதுக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்லு காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மதியம்‌ 2:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6:00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மிக்சி, கிரைண்டர்‌. தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00. மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மதியம்‌ 2:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • நன்றி

Popular posts from this blog