Breaking தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி முடிவு
Breaking தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் அரசு அதிரடி முடிவு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மீதம் உள்ள 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் 21-ம் தேதிக்கு பின் 50% பயணிகளுடன் நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி
