Posts

Showing posts from April, 2022

பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறது தமிழகத்தில்

Image
  பள்ளிகள் நேரம் மாற்றப்படுகிறதா கோட்டைக்கு பறக்கும் கோரிக்கை சென்னை: பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைப்பதற்கான அறிவிப்பு வெளிவருமா? தமிழக மாணவர்களுக்கு விரைவில் குட்நியூஸ் வரக்கூடுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது.. இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன. கோடை வெயில் இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன் எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்க...

சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது

Image
  சமையல் எண்ணெய் விலை ஒன்றரை மாதத்தில் Rs 60 வரை உயர்ந்து உள்ளது சேலம்: உலகளவில் மலேசியாவில் பாமாயிலும், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும், ரஷ்யா, உக்ரைன் நாடுகளிலிருந்து கச்சா சமையல் எண்ணெயும் இறக்குமதி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெயை பொறுத்தமட்டில் இந்தியாவின் தேவைக்கு வெளிநாடுகளையே பெரும்பாலும் நம்பி இருக்கிறோம். இந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷ்யா, உக்ரைனில் இருந்து வரவேண்டிய எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை மாதத்தில் சமையல் எண்ணெய் விலை 30முதல் 40சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மாத வருமானத்தில் கூடுதல் செலவு ஏற்படுவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து சேலம் சமையல் எண்ணெய் வியாபாரிகள் கூறுகையில், ''ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், அங்கிருந்து கக்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு லிட்டர் ஆயில் ₹130 லிட்டருக்கு விற்றது. போர் தொடங்கிய நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் லிட்டர் விலை ₹190 வரை உயர்ந்துள்ளது. எதிர்வ...

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

Image
  விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது. வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் பீஸ்ட் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூடியூபில் ரிக்கார்டுகளை உருவாக்கி வருகிறது. தற்போத...