தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை Video Link 1 :- Watch Video Video Link 2 :- Watch Video சென்னை : செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் 9,10,11,12 வகுப்புகள் திறக்கப்பட உள்ளதால் தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வழிமுறைகள் : *பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும் *வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். *பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும். *பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவர்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம். *ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். *வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவர். *வகுப்பறைகளிலும் , பள்ளி வளாகத்திலும் மாணவர்கள்,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். *மாணவர்களை அமர வைப்பதில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டு...